states

img

ஐ.ஐ.டி கான்பூரில் ஒரே மாதத்தில் 3வது தற்கொலை!

ஐ.ஐ.டி கான்பூரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிஎச்டி மாணவி பிரியங்கா (29), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு, படிப்புச் சுமை, அதீத மன அழுத்தம் போன்ற காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஐ.டி கான்பூரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிஎச்டி மாணவி பிரியங்கா (29), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பி.எச்.டி படிப்பில் சேர்ந்துள்ளார். இது, ஐஐடி கான்பூரில் இந்த மாதத்தில் நடந்த 3ஆவது தற்கொலை சம்பவம் ஆகும்.