உத்தரகண்ட் மாநில சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்கள் பின்பற்றி வரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பதிலாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டமான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2018-ஆம் ஆண்டில் இது தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை 21-ஆவது சட்ட ஆணையம் வெளியிட்டது. எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இச்சட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் உத்தரகண்ட் மாநில சட்டமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவில், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களும், கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில பாஜக அரசு சேர்ந்துள்ளது.