உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை, “எலி வளை” சுரங்கத் தொழிலாளர்கள் 12 பேர் இரவு, பகல் பாராமல் போராடி மீட்க உதவினர். “எலி வளை” சுரங்கத் தொழிலாளர்கள் 12 பேரில் வாகில் ஹாசன், முன்னா குரேஷி, இர்ஷாத் அன்சாரி, நசீம் மாலிக், பிரோஸ் குரேஷி, ரஷித் அன்சாரி ஆகிய 6 பேர் தில்லியின் வடக்கு ஸ்ரீராம் காலனியில் வசிக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தில்லி மாநில தலைவர்கள் 6 தொழிலாளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பணியைப் பாராட்டியதுடன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசிக்கும் மீதமுள்ள “எலி வளை” சுரங்க தொழிலாளர்களையும் விரைவில் சந்திப்போம் என சிபிஐ(எம்), சிஐடியு தலைவர்கள் தகவல் தெரிவித்தனர்.