states

img

உத்தரகண்ட் சுரங்க விபத்து : 40 தொழிலாளரின் நிலை என்ன?

உத்தர்காசி, நவ. 13 - உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் வித மாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலைத் திட்டத்தின் ஒருபகுதியாக உத்தர்காசி யிலிருந்து யமுனோத்ரி தாம் வரை யிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில், 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  இதில் 40 தொழிலாளர்கள் சுரங்க த்திற்குள் சிக்கிக் கொண்ட நிலை யில், அவர்களை மீட்க 36 மணி நேரத்திற்கும் மேலாக, ஷாட்கிரேட்டிங் தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து இடி பாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதுவரை 21 மீட்டர் அளவுக்கு இடிபாடுகள் அகற்றப் பட்டுள்ளது. இன்னும் 35 மீட்டர் அளவுக்கு இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் உள்ள சகதி களை வெளியேற்ற ஹரித்வாரில் இருந்து 900 மிமீ டயா எம்எஸ் ஸ்டீல் பைப் கொண்டுவரப்படுகிறது. அதன்பிறகே 40 பேரையும் மீட்கும் பணி நடைபெற உள்ளதாகவும், தொழிலாளர்கள் பத்திர மாக வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும்,  அவர் களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தேசிய  நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்ட மைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) தகவல் தெரிவித்துள்ளது.