டேராடூன், நவ. 17 -
உத்தரகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதைப் பணியின்போது, கடந்த நவம்பர் 12 அன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதைப் பணியின்போது, கடந்த நவம்பர் 12 அன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
அவர்களை மீட்கும் பணி 6 நாட்களாக சுமார் 120 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. தொழிலாளர்கள் 100 மணி நேரத்து க்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதால் அவர்களின் மனம் மற்றும் உடல்நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.
40 தொழிலாளர்களின் உயிர் சம்பந்தப்பட்ட மீட்புப் பணியில், உத்தரகண்ட் மாநில ஆளும் பாஜக அரசு, மந்தமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறி, சக தொழி லாளர்களும், சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களின் உறவினர்களுமாக 100-க்கும் மேற்பட்டோர் புதனன்று சுரங்க விபத்து நடைபெற்ற இடத்தில் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னரே நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் மீட்புப் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய விமானப்படைக்குச் சொந்த மான, சி-130 ஜெ விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அதிநவீன செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரம் வியாழக் கிழமை நிறுவப்பட்டது. வெள்ளிக் கிழமை காலை வரை இடிபாடுகளில் 21 மீட்டர்கள் வரை தோண்டப்பட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களை மீட்க இன்னும் 60 மீட்டர்கள் மட்டுமே தோண்டப்பட வேண்டும், அதன் பின்னர் தொழி லாளர்கள் வெளியேற 900 மில்லி மீட்டர், 800 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே செலுத்தி அதன் மூலம் தொழி லாளர்கள் 40 பேரையும் வெளியேற்ற மீட்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.
எப்படியும் சனிக்கிழமைக்குள் (நவம்பர் 18) தொழிலாளர்கள் மீட்கப் பட்டு விடுவார்கள் என தேசிய பேரிடர் மீட்புப்படை தலைவர் அதுல் கர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழி லாளர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குழாய்களின் மூலம் உணவு, தண்ணீர் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் மன உறுதியை தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து அவர்களுடன் தகவல்தொட ர்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.