states

தற்பாலின உறவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கு

தற்பாலின உறவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில், அக்டோபர் 17 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தனது தீர்ப்பில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த தீர்ப்புடன் உடன்படுவதாக நீதிபதி ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் தங்களின் தீர்ப்பை வழங்கியிருந்த தால், இம்மூன்று நீதிபதிகளின் தீர்ப்பே 3-2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் அரசியல் சாசன அமர்வின் இறுதித் தீர்ப்பாக அமைந்தது

ந ாங்கள் அவர்களை (தற்பாலினத் தம்பதிகள் உள்ளிட்ட பால் புதுமை யர்களை) முழுமையாக ஆதரிக்கிறோம். தன்பாலின உறவு என்பது நகர்ப்புறக் கருத்தோ அல்லது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது மட்டும் அல்ல என்ற தலைமை நீதிபதியின் கூற்றை நாங்கள் ஏற்கிறோம். திருமணம் ஒரு சமூக ஏற்பாடு என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அமைப்பு என்ற வகையில், திருமணம் என்பது அரசு என்ற அமைப்புக்கு முந்தியது. அரசுகளைப் பொருட்படுத்தி திருமண அமைப்பு இல்லை என்பதையே இது குறிக்கிறது. திருமண முறைகள் அரசை சாராதவை. அதன் ஆதாரங்கள் வெளிப்புறமானவை.

தற்பாலினத்தவர் திருமணத்தைப் பொறுத்த வரை, உறவு முறைக்கான உரிமை உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அது பிரிவு 21-க்குள் அடங்கும் என்பதை நாங்கள் உறுதியாக அங்கீகரிக்கிறோம். இது ஒரு இணையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நெருக்கத்தையும் உள்ளடக்கியது. அவர்கள் எல்லாக் குடிமக்களையும் போலத் தங்கள் உரிமையைத் தடையின்றி அனுபவிக்கத் தகுதியுடையவர்கள்.

திருமணம் அடிப்படை உரிமையாகக் கருதப்படும் நிலையில், அதனை மறுக்க முடியாது என்ற கருத்தில் தலைமை நீதிபதியுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

தலைமை நீதிபதியின் தீர்ப்பு ஓர் ஒருங்கிணைந்த உரிமைகளின் கோட்பாட்டை யும், சட்ட அங்கீகாரமின்மை உரிமைகளை எவ்வாறு மீறுகிறது என்பதையும் முன்வைத்தது. ஆனாலும், சட்டம் மவுனமாக இருக்கும் போது, 19(1)(ய) பிரிவானது அந்த வெளிப்பாட்டிற்கு வசதியாக ஒரு சட்டத்தை இயற்றுமாறு அரசை கட்டாயப்படுத்தாது என்று கூறுகிறோம்.

சட்டத்தை உருவாக்குமாறு அரசை நீதி மன்றம் கட்டாயப்படுத்த முடியாது. எனவே, நீதித்துறை ஆணையின் மூலம் குடிமைச் சமூக உரிமையை உருவாக்குவதில் சிக்கல்கள் உள்ளன. பால் புதுமையர்க்கு நீதிமன்றத்தால் சட்ட  கட்டமைப்பை உருவாக்க முடியாது. அதற்கு பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டி யிருப்பதால், அதை சட்டமியற்றும் அதிகாரம் படைத்த அமைப்புக்கள்தான் செய்ய வேண்டும். சட்டங்களை இயற்றுவதற்கு சட்டப்பிரிவு 14 மற்றும் 15(3)ஐ மேம்படுத்துவதில் தேவையான இடங்களில் சட்டமியற்றுபவர்களின் பங்கே குறியீடாக செயல்பட வேண்டும்.

அனைத்துப் பால் புதுமையர்களும் தங்கள் இணையரைத் தேர்ந்தெடுக்க உரிமை  உண்டு. ஆனால், அத்தகைய புதுமையான உறவு களிலிருந்து எழும் உரிமைகளின் பிரச்சனை களை அங்கீகரிக்க அரசு கடமைப்பட்டது அல்ல. (புதுமையான உறவுகளிலிருந்து எழும் உரிமைகளின் பிரச்சனைகளை அங்கீகரிக்க அரசு கடமைப்பட்டது என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியிருந்தார்). இந்த விஷயத்தில் தலைமை நீதிபதியுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சிறப்புத் திருமணச் சட்டத்தில் பாலின நடுநிலை என்பதற்கான விளக்கம் சில சமயங்களில் சமமானதாக இருக்காது; மற்றும், பெண்கள் எதிர்பாராத விதத்தில் பாதிப்புகளுக்கு ஆளாகலாம். இது சிறப்புத் திருமணச் சட்டத்தை, தற்பாலினத் தம்பதிகளுக்குத் செயல்படுத்த முடியாததாக ஆக்குகிறது.

பால் புதுமையர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, ஓய்வூதியம்  போன்ற பலன்களை மறுப்பது பாதகமான பாரபட்சமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வது என்பது, சட்டமியற்றும் அமைப்பு களின் பலவிதமான கொள்கைத் தேர்வுகள் மற்றும் கட்டமைப்பை உள்ளடக்கியது. இந்த அம்சங்களை ஆராய ஒன்றிய அரசால் உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மே 3 அன்று சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, பாலின உறவுகளில் உள்ள திருநங்கைகள் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை, தலைமை நீதிபதியோடு இணைந்து நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், பால் புதுமை  தம்பதி களின் தத்தெடுக்கும் உரிமையில் தலைமை நீதிபதியுடன் நாங்கள் உடன்படவில்லை. சில கவலைகளை நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதேபோல திருமணமாகாத அல்லது பாலின உறவில் இல்லாத தம்பதிகள் நல்ல பெற்றோராக இருக்க முடியாது என்றும் நாங்கள் கூறவில்லை. பெரிய அளவில் நிலையான கட்டமைப்புக்கள் தேவை.

அதேநேரம், பால் புதுமையர்கள் இடையூறு இல்லாமல் இணைந்து வாழவும், அச்சுறுத்தல் இல்லாமல் வாழவும் உரிமை உண்டு.

தற்பாலின திருமண அங்கீகாரத்தில், பல்வேறு கேள்விகளுக்குத் தீர்வுகாண வேண்டி யிருக்கும் நிலையில், அவற்றை நீதிமன்றம் மற்ற நிறுவனங்களின் (நாடாளுமன்ற - சட்ட மன்றங்களின்) முடிவுக்கு விட்டுவிடவேண்டும். பால் புதுமையர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீது நாம் எவ்வளவு அனுதாபம் கொண்டாலும், அதற்கான தீர்வும், வழிமுறைகளும் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும்.

திருமணம் போன்ற குடிமைச் சமூக அமைப்புக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மட்டுமே இருக்க முடியும். எனினும், இது பால் புதுமையர்கள் உறவுகளில் நுழைவதற்கான உரிமையைத் தடுக்காது. தற்பாலின திருமணத்திற்கு அங்கீ காரம் வழங்காதது, அடிப்படையில் சிறப்பு திருமணச் சட்டத்திற்கு எதிரானது அல்ல.

மற்றபடி, ஏற்கெனவே நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக்கைக்கு இணங்க, பால் புதுமைத் தம்பதிகளுக்கான உரிமைகள் மற்றும் நன்மைகளை ஆராய ஒன்றிய அரசு உயர் அதி காரம் கொண்ட குழுவை அமைக்கும். பால் புதுமை யர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை என்ற நிலையை அரசு உறுதி செய்யும்”