அரியானாவில் காற்று மாசு காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் காற்று மாசு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தலைநகர் தில்லியில் கடந்த29ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமாகி விட்டதால் , மறு உத்தரவு வரும்வரை அனைத்துப் பள்ளிகளும் 3-ம் தேதி முதல் மூடப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத், ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.