states

img

அரியானா – கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி  

அரியானா மாநிலத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.  

அரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள புண்ட்ரியில் இன்று திடீரென இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் கைதலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர்களில் 4 பேர் ஹிசார் மாவட்டத்தின் சட்ரோத் காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சபிடோனைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.  

மேலும் இரு கார்களில் பயணம் செய்தவர்களும் புண்ட்ரி மற்றும் குருக்ஷேத்ராவில் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்வதற்காக சென்றுகொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;