மோடி அரசு தனது 10 ஆண்டுகால தவறுகளை மறைக்கவும், தேர்தல் பத்திர முறைகேட்டை திசைதிருப்பவும், மதம் சார்ந்த நடவடிக்கையுடன் நாட்டை துண்டாடும் நோக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திங்களன்று அமல்படுத்தியது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வரும் நிலையில், அசாமில் 30க்கும் மேற்பட்ட மாணவ அமைப்புகள் இரவு பகல் பாராமல் கடந்த 50 மணிநேரமாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.