states

img

போதைப்பொருள் கூடாரமாக மாறும் பாஜக ஆளும் அசாம் மாநிலம்

பாஜக ஆளும் அசாம் மாநிலத்  தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவிய ஹிமந்தா பிஸ்வா முதல்  வராக உள்ளார். அசாமில் பாஜக ஆட்சி  அதிகாரத்தில் அமர்ந்த நாளில் இருந்து  போதைப்பொருள் புழக்கம், கடத்தல்  சம்பவங்கள் அரங்கேறுவது சர்வசாதா ரண நிகழ்வாக உள்ளது. கரீம்கஞ்ச் மாவட்  டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்  யப்பட்டுள்ளது. அசாம் காவல் துறை  சிறப்பு பணிக்குழுவிற்கு (எஸ்டிஎப்) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படை யில் மிசோரம் மாநில எல்லையில் 5.1 கிலோ  ஹெராயின் மற்றும் 64 ஆயிரம் “யாபா”  மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி என அசாம் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.100 கோடி  மதிப்புள்ள போதைப்பொருள் மிசோரம் மாநிலத்திற்கு கடத்தப்பட்டதா? இல்லை  மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம்  மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டதா? என்பதை அசாம் காவல்துறை விளக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.