உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்ட மருத்துவமனையின் அலட்சியத்தால் கடந்த 72 மணி நேரத்தில் 54 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் 400 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 72 மணி நேரத்தில், நோயாளிகள் அடுத்தடுத்து 54 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நோயாளிகளின் உயிரிழப்பிற்கு வெப்ப அலை தான் காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது. இவ்வாறு கூறிய மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நோயாளிகள் மரணம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.