states

நாம் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறோம்; ஆனால் நாம் தோழர்கள்!

சியோல், செப்.28- தமிழ்நாட்டில் போராடும் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்’திற்கு, தென் கொரியாவின் ‘தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன்’ (SIWD) தன் உறுதியான ஒருமைப்பாட்டை தெரிவித்துள்ளது. கொரிய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தமானது,  தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கை களை முன்வைத்து நடைபெறுகிறது. 

அடிப்படை உரிமை

இவை அனைத்தும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அடிப்படை உரிமையாகும். சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கத்தின் (SILWU) முதல் பொதுக்குழு கூட்டம் ஜூலையில் நடைபெற்றது என்று அறிந்தோம்.  அதே நாளில் தான் எங்களின் ‘தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் (SIWD)’ முதல் பொதுவேலைநிறுத்தம் தென் கொரியாவில் தொடங்கியது. உங்கள் சங்கம் தொடங்கிய அன்றே எங்களுக்கு ஆதரவாக நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். உங்கள் சங்கத்தின் பொதுக்குழு வும், எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தமும் ஒரே தினத்தில் தொடங்கியிருப்பது தற்செயல் ஆனதல்ல.  நாம் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறோம். வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். நமது ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாம் உறுதி பூண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் தோழர்களாக இணைந்தி ருக்கிறோம். ஒரு சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் ‘சாம்சங் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனம்’ எங்கு செயல்பட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பை அது மதித்து நடக்க வேண்டும். 

சட்டப்படியான போராட்டம்

ஆனால், மிகவும் வருந்தத்தக்க வகையில் ‘சாம்சங் இந்தியா’ நிறுவ னத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வில்லை. நியாயமான வேலை நிலைமைகள் இல்லை. சாம்சங் இந்தியா தொழிலாளர்  சங்கமும், சிஐடியு-வும் தலைமை தாங்கி நடத்தும் இந்த வேலைநிறுத்தம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்ப தற்கான சட்டப்படியான போராட்டம்.  இந்நிலையில், ‘சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்’ இந்த பிரச்சனையை நேர்மையாகவும், விரைவாகவும் தீர்த்து வைக்க வேண்டுமென்று கோருகிறோம். 

தொழிலாளர் விரோதக் கொள்கை

சாம்சங் நிறுவனத்தின், ‘தொழிற்சங்கம் இல்லாக் கொள்கை’யை தென் கொரியாவின் தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் எதிர்க்கிறது. தனது தொழிற்சங்கம் இல்லாக் கொள்கையை இந்தியாவிலும் சாம்சங் நிறுவனம் பின்பற்றுவதை கவலையோடு பார்க்கிறோம். ‘சங்கம் இல்லா நிறுவனம்’ என்கிற நிர்வாக கொள்கை தொழிலாளர் விரோத கொள்கையாகும். அது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. இத்தகைய கொள்கை கொரியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்த கொள்கை தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகிறது. கார்ப்பரேட் லாபத்திற்காக தொழிலாளர்களின் குரல்களை புறக்கணிக்கிறது. இது காலாவதியாகிப்போன நிர்வாக அணுகுமுறையாகும்.

வளர முடியாது

தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தாத நிறுவனம் வளராது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கைகளுக்கு செவிமடுக்க வேண்டும், இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் அதன் கம்பெனிகளில் இந்த செவிமடுப்பு இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சியின் பொருட்டு பரஸ்பரம் பாலமாக இருப்பதற்கான வழி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். 

இணைந்து குரல் கொடுப்போம்!

இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழியமைக்கும் என்று நம்பு கிறோம். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் தலைமையிலான தொழிலா ளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கி றோம். உங்களின் நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரி மைக்காக போராடும்போது அவர்களுக்கு எங்கள் தேசிய சாம்சங் எலக்ட்ரா னிக்ஸ் யூனியன் ஒருமைப்பாட்டை தெரிவிப்போம். அவர்களுக்காக நாங்களும் இணைந்து குரல் கொடுப்போம். சிஐடியு மற்றும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.