மத்தியப் பிரதேசத்தில் ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஆண்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட 16 குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. செஃப்ட்ரியாக்சோன் எனப்படும் ஆன்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட 16 குழந்தைகளுக்கு உடல் நடுக்கம், அதிக காய்ச்சல், உடலில் கொப்பளங்கள், வாந்தி போன்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படுத்திய ஆன்டிபயாடிக் ஊசியின் மாதிரி, ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (SDM) லக்ஷ்மி காமட் தெரிவித்துள்ளார்.