புதுச்சேரி, மார்ச் 15- வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹெச் 3 என் 2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதி யோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளி களுக்கு விடுமுறை விடவேண்டும் என்று பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்விய மைச்சர் நமச்சிவாயம் புத னன்று (மார்ச் 15) அறிவிப்பு வெளி யிட்டார். அதில், “புதுச்சேரி யில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படு கின்றனர். புதுச்சேரி, காரைக் கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடு முறை விடப்படுகிறது’” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், “புதுச்சேரியில், அனைத்து மருத்துவ மனை களிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக புறநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. எவரேனும் காய்ச்சல் சளி, இருமல் தும்மல் போன்ற அறிகுறிகளோடு மருத்துவ மனைக்கு வந்தால் அவர்க ளுக்கு ஹெச் 3 என் 2 வைரஸ்-க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இவ்வகை வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிடலாம்” என்று தெரிவித்தனர்.