states

img

மணிப்பூர் மாநிலத்தில் பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக குக்கி- மெய்டெய் சமூகத்தினருக்கு இடையே கலவரம் நடந்து வரும் நிலையில், மணிப்பூரின் 3 மாவட்டங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டெய்-குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே-3 ஆம் தேதி தொடங்கிய இனக்கலவரம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரின் 3 மாவட்டங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். காங்போக்பி மாவட்டம், லோச்சிங் ரிட்ஜ் பகுதியில் மாநில போலீசார், அசாம் ரைப்பில்ஸ் படையினர் இணைந்து சோதனை நடத்தினர்.

இதில், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.

இதுபோல, சுராசந்தப்பூர் மாவட்டம் கோதோல் என்ற கிராமத்தில் மாநில காவல்துறை, பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் இரு ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட் குண்டுகளை கைப்பற்றினர்.

தவுபால் மாவட்டம், பைனோம் மலைப் பகுதியில் மாநில போலீசார், அசாம் ரைபில்ஸ் படை இணைந்து 4 கையெறி குண்டுகள், 3 டெட்ட னேட்டர்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.