திருவனந்தபுரம்,மே.02- கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
விழிஞ்சம் துறைமுகமானது சர்வதேச கப்பல் வழித்தடத்திலிருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையைச் சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.