கொச்சி, மே 24- ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா (24) கணவர் வீட்டில் தற் கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12.5 லட்சம் அபராதமும் விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வரதட்சணை மரணத்திற்கு ஐபிசி 304இன் கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை யும், தற்கொலைக்கு தூண்டியதற்காக ஐபிசி 306இன் கீழ் 6 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராத மும் விதிக்கப்பட்டது. ஐபிசி 498Aஇன் படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்ட னையும், அரை லட்சம் ரூபாய் அபரா தமும் விதிக்கப்பட்டது. கொல்லம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் இந்த தண்டனை களை விதித்து உத்தரவிட்டார். வரதட்சணை கொடுமையை தொ டர்ந்து நடந்த மரணம், வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டு தல், வரதட்சணை தடைச்சட்டத்தை மீறி வரதட்சனை கோருதல், வரதட்சணை பெறுதல் ஆகியவற்றின் கீழ் குற்ற வாளி என திங்களன்று (மே 23) கொல்லம் முதல் வகுப்பு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. விசாரணையின்போது, விஸ்மயா வின் தற்கொலை, கொலைக்கு சமம் என்று அரசுத் தரப்பு கூறியது. அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது சமூகத்திற்கு ஒரு செய்தி யாக இருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், அரசு அதிகாரி படித்தவர், சம்பவத்தில் எந்த வருத்த மும் அவருக்கு இல்லை. மனைவி விஸ் மயாவின் முகத்தில் மிதித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கருணை வழக்குக்கு தகுதியானவர் அல்ல என நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்க றிஞர் வாதிட்டார். அதேநேரம், தனக்கு ஆயுள் தண்ட னை விதிக்கக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவர் கோரிக்கை விடுத்தார். வரதட்சணை கேட்கவில்லை, அதற்காக சித்திரவதை செய்யவில்லை. கொலை வழக்கு போன்றதல்ல இது. தனது தந்தைக்கு ஞாபக மறதி பிரச்சனை இருப்பதாகவும், அவரை கவனிக்க வேறு யாரும் இல்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தெரி வித்தார். கொல்லம் மாவட்டம் சாஸ்தம் கோட்டையில் உள்ள தனது கணவர் வீட்டில் 2021 ஜூன் 21 அன்று விஸ்மயா (22) இறந்து கிடந்தார். இச்சம்பவத்தி ற்கு ஒரு நாள் முன்பு, வரதட்சணைக் காக கணவன் கிரன்குமார் துன்புறுத்திய தாகக் கூறப்படும் வாட்ஸ்அப் செய்திக ளையும், அதே போல் தனது உடலில் காயங்கள் மற்றும் அடித்ததற்கான புகைப்படங்களையும் விஸ்மயா அனுப்பியுள்ளார். 2020 இல் நடந்த திருமணத்தின் போது கிரண்குமாருக்கு 100 சவரன் தங்கம் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் தவிர, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் வரதட்சணை யாக கொடுக்கப்பட்டதாக விஸ்மயா வின் தந்தை திரிவிக்ரமன் நாயர் கூறி யுள்ளார். ஆனால் குமாருக்கு அந்த கார் பிடிக்காமல் ரூ.10 லட்சம் ரொக்கமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். முடி யாது என்று கூறியதால், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
2021 ஜூன் 21, அன்று அதிகாலை 3.30 மணியளவில் கணவன் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்ம யாக காணப்பட்டார். இந்த வழக்கில் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தொலைபேசியில் உள்ள உரையாடல்கள் திறந்த நீதி மன்றத்தால் ஆராயப்பட்டன. சம்பவம் நடந்த 80 நாட்களுக்குள் சாஸ்தாங் கோட்டை டி.எஸ்.பி பி.ராஜ்குமார் தலை மையிலான விசாரணைக் குழு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த விசாரணையை தென் மண்டல ஐஜி அர்ஷிதா அட்டலூரி, கொல்லம் ரூரல் எஸ்பி கேபி ரவி ஆகி யோர் மேற்பார்வையிட்டனர். சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜி மோகன்ராஜ் ஆஜரானார். கேரளத்தை உலுக்கிய இந்த வழக்கில் ஓராண்டுக்களுள் விசார ணை முடித்து தண்டனையும் அறிவிக் கப்பட்டுள்ளது.