கொச்சி, டிச.12- சபரிமலையில் நெரிசல் அதிகமான நாட்க ளில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதி கரிக்கலாமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தந்திரியிடம் ஆலோசித்த பிறகு தெரிவிப்பதாக ஞாயிறன்று தேவசம்போர்டு பதில் அளித்திருந்தது இந்நிலையில் நேர நீட்டிப்பை திங்களன்று (டிச.12) தேவசம் போர்டு உறுதி செய்துள்ளது. சபரிமலைக்கு தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சமாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் தரிசன நேரத்தை அதிகரிக்குமாறு நீதி மன்றம் கூறியது. தற்போது தரிசனம் 18 மணி நேரமாகும். சபரிமலை மரக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக தேவசம் சிறப்பு ஆணையரிடம் உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. நீதிபதி அனில் நரேந்திரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விடுமுறை நாளான ஞாயிறன்று (டிச.11) இந்த வழக்கை பரிசீலிக்க சிறப்பு அமர்வு நடத்தியது. சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப் படுத்த பத்தனம்திட்டா ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அதிகபட்ச மாக 4,800 பக்தர்கள் 18-ஆம் படி ஏறலாம் என்று வாரியம் தெரிவித்துள்ளது. மரக்கூட் டம் முதல் சன்னிதானம் வரை நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் உத்தரவிட்டது. நிலக்கல்லில் இருந்து இறுதி வரை காவல்துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட வேண்டும். நிலக்கல் வாகன நிறுத்த எல்லைக்குப் பிறகு போக்குவரத்தை கண்டிப்பாக கட்டுப் படுத்த வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்த தாரருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தரிசனம் செய்யாமல் யாரும் திரும்பும் நிலை ஏற்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்கூட்டம் முதல் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு வெந்நீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டு வருவதாக தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. மாவட்ட ஆட்சி யர் திவ்யா எஸ்.ஐயர் நீதிமன்றத்தில் ஆன் லைனில் ஆஜரானார். தினமும் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் வந்து செல்வதாகவும், காலை தரிசனத்துக் குப் பிறகும் சன்னிதானத்தில் தங்கிச் செல்வ தாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
1 மணி நேரம் நீட்டிப்பு
நீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி சபரி மலை தரிசனத்துக்கு ஒரு மணி நேரம் நீட்டிப்ப தாக கோயில் தந்திரி தெரிவித்தார். அதி காலை 3 மணிக்கு துவங்கும் தரிசனம் பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 வரையும், மாலை 3 மணிக்கு துவங்கி இரவு 11 மணி என்பதற்கு பதிலாக இரவு 11.30 வரை நீட்டிக்கப்படும். திங்களன்று ஒரு லட்சம் பேர் தரிசனத்துக் காக பதிவு செய்தனர். செவ்வாயன்று (டிச.13) 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் தரிசன நேரம் நீட்டிப்ப தாக தந்திரி தெரிவித்தார். இத்தகவலை திங்க ளன்று நீதிமன்றத்தில் தேவசம்போர்டு தெரி வித்தது.