states

img

வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிக்காக நடிகர் மோகன்லால் நிதியுதவி

வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் காரணமாக 4 கிராமங்கள் மண்ணில் புதைந்தன, இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் நிவாரணப்பணிகளுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர், நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி ராணுவ உடையில் நேரில் சென்று பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டார்.