states

img

கர்நாடகா: 18 அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 75 இடங்களில் அதிரடி சோதனை  

கர்நாடகவில் 18 அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.    

கர்நாடக மாநிலத்தில் 18 அரசு அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை குறிவைத்து இன்று அதிகாலை முதல் மாநிலத்தில் சுமார் 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்துத்துறை, பெங்களூரு வளர்ச்சி குழு, வனத்துறை, பாசன துறை, பொதுப்பணி துறை, சமூகநல துறை சுற்றுச்சூழல் துறை போன்ற பல துறையை சேர்ந்த அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.  

இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல நூறு கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 300 பேர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 100 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே சமயத்தில் 18 அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்படும் இந்த சோதனை கர்நாடக அரசு அதிகாரிகள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.