states

img

பாகிஸ்தான் - சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் ஒன்றிய வெளியுறவுத்துறை  அமைச்சகம்

பாகிஸ்தான் - சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் ஒன்றிய வெளியுறவுத்துறை  அமைச்சகம்

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா இடையே பாது காப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பரஸ்பர பாது காப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக் கையில்,”இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக் கப்படும்” என கூறப்பட்டுள்ளது. பாகிஸ் தான் - சவூதி அரேபியா ஆகிய இருநாடு களும் நேட்டோ (NATO) அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படு த்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளி யுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சவூதி அரேபியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது பரிசீலனையில் இருந்தது. இந்த ஒப் பந்தத்தால் நமது நாட்டின் பாதுகாப்புக் கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்தி ரத்தன்மைக்கும் எவ்வாறு தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்கிறோம். நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப் பதையும், அனைத்து களங்களிலும் விரி வான தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வோம்” என அவர் கூறினார்.