states

img

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்வு

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா  தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் சனிக்கிழமை அன்று (ஜன.18) நடை பெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத், பீகார் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி, கட்சியின் மூத்த தலைவர்கள் மனோஜ் ஜா மற்றும் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல் வேறு விவாதம் மற்றும் தீர்மானங்களு க்குப் பிறகு தேஜஸ்வி கட்சியின் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் தலைவராக அவரது தந்தை லாலு பிரசாத் உள்ளார். தேஜஸ்வியின் செல்வாக்கு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி கட்சியின் செயற்குழு தெரிவித்துள்ளது.