ரூ.5,817 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை
ரூ.5,817 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட வில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்க ளிடம் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக 2023 மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2023அக்டோபர் 7 வரை வங்கிகள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது. அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப் பட்டுள்ளதாகவும், ரூ.5,817 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
