தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கிலேயே தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க அஞ்சும் பயணிகள்
ஹாங்காங்கிலிருந்து திங்க ளன்று மதியம் 12:16 மணிய ளவில் (உள்ளூர் நேரம் - இந்திய நேரப்படி மதியம் 12.20 மணி) ஏர் இந்தியா விமானம் தில்லியை நோக்கி கிளம்பியுள்ளது. 5:35 மணி பயண நேரத்தை கொண்ட ஏர் இந்தியா விமா னம் திங்களன்று இரவு 6 மணிக்குள் தில்லியை வந்தடையும் என்ற நிலையில், ஹாங்காங்கிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை விமானி கள் சந்தேகத்தின் அடிப்படையில் கண்ட றிந்தனர். இதனால் ஹாங்காங் விமான நிலையத்திலேயே மீண்டும் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவ தாகவே தகவல் வெளியானது. விமா னத்தின் மறு புறப்பாடு தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அகமதாபாத் விமான விபத்து சம்ப வத்திற்கு பிறகு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவே பயணிகள் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வரு கின்றன. இத்தகைய சூழலில் கொல் கத்தா, ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அடுத்தடுத்து தரையிறங்கிய சம்பவங்களால் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க பயணி கள் அஞ்சுகின்றனர்.