ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா'
இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் முற்றியுள்ளது. ஈரானில் வசிக்கும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய வெளியுற வுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியுள்ளேன். ஈரானில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்'
பிரதமர் மோடி கனடா பயணத்திற்கு முன் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். மோதானி (மோடி - அதானி) ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய நபர் சைப்ரஸ் குடியுரிமையை கொண்டுள்ளார். சைப்ரஸைத் தளமாகக் கொண்ட ஒரு நிதி நிறுவனம் அதானி நிறுவனங்களில் சுமார் ரூ.3600 கோடி முதலீடு செய்துள்ளது. இதற்கு மேல் புரிய வைக்க ஒன்றுமில்லை.
திரைக்கலைஞர் அமீர் கான்
“ஆப் கி அதாலத்” என்ற நிகழ்ச்சியில் நீங்கள் துருக்கி நாட்டுக்கு சென்றீர்கள்; ஆனால் துருக்கியோ, பாகிஸ்தானை ஆதரித்தது என கேள்வி கேட்டார்கள். ஒன்றிய அரசு கூட துருக்கி யின் நிலநடுக்கத்துக்கு உதவிகளை வழங்கியது. பாகிஸ்தானை துருக்கி ஆதரிக்கும் என தெரிந்தா ஒன்றிய அரசு அதை செய்தது?
இந்திய தேசிய லோக் தளம் தலைவர் பிரகாஷ் பாரதி
இவிஎம் இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு மூலம், வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் அட்டை கள் வழங்கப்பட வேண்டும். வாக்கு எண் ணிக்கை அதே நாளில் நடைபெற வேண்டும். இதுதான் நாட்டின் நலனுக்கு நல்லது.