இஸ்ரேலுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் நழுவிக் கொண்டது மோடி அரசு
புதுதில்லி ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரே லைக் கண்டித்து, ஷாங்காய் ஒத்து ழைப்புக் கூட்டமைப்பு (SCO) சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. மேலும், இஸ்ரேல் - ஈரான் விவகாரம் குறித்த அந்தக் கூட்டமைப்பின் விவாதம் மற்றும் அறிக் கையில் இந்தியா பங்கேற்கவில்லை. இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு வெளி யிட்ட அறிக்கையில் ஈரான் அரசுக்கும், மக்க ளுக்கும் ஷாங்காய் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கெள்கிறது. “எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு உட்பட பொதுமக்கள் மீதான இத்தகைய ஆக்ரோஷ மான தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புக ளுக்கு வழிவகுத்துள்ளன. இவை சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் சட்டங் களை மிக மோசமான முறையில் மீறும் செயலா கும். இது ஈரானின் இறையாண்மையின் மீதான அத்துமீறல் மட்டுமல்ல, பிராந்திய மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்குச் சேதத்தை விளை வித்து, உலக அமைதி மற்றும் உறுதித்தன்மை க்குக் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத் துகின்றது” எனக் கூட்டமைப்பு கண்டித்தது. மேலும், “ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை அமைதி யான, அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறை கள் மூலம் மட்டுமே தீர்ப்பதற்கு ஷாங்காய் உறுப்பு நாடுகள் உறுதியாக ஆதரிப்பதாகவும், ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பினர் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். எனவே எங்கள் கூட்டமைப்பின் உறுப்பு நாடு களுக்கு எதிராக இயக்கப்படும் எந்தவொரு சட்ட விரோத நடவடிக்கைகளும் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவ தற்கான எங்கள் அசைக்க முடியாத உறு திப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்தியாவும் ஈரானும் சர்வதேச அமைப்பு களில் அணிசேரா நாடுகள் கூட்டமைப்பில் முக்கி யப் பங்கு வகித்தன. தற்போது, வளர்ந்து வரும் தெற்குலக நாடுகளின் முக்கியக் கூட்ட மைப்பான பிரிக்ஸ் அமைப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிலும் உறுப்பினர்க ளாக உள்ளன. இவ்வாறு ஒரே கூட்டமைப்பில் வளர்ச்சிக்காக இணைந்து பயணிக்கும் போதி லும், போர் சூழும் நேரத்தில் ஈரானுக்கு ஆதரவா கக் கூட்டு முடிவில் உறுதியாக இல்லாமல் இந்தியா விலகி இருப்பது இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை செயலாக்கம் மீதான விமர்ச னங்களை எழுப்பியுள்ளது. இத்தகைய செயலால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சமீப காலமாக அதிக கேள்விக்குள்ளாகி வருகிறது. ஐ.நா. பொது அவையில் பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்தது இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்தியது. அதேபோல, சர்வதேசப் பொருளாதாரம் சார்ந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவிடம் இந்திய வெளியுறவுக் கொள்கையையும் மோடி தலைமையிலான பாஜக அரசு சமரசம் செய்துகொண்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்த முடிவைக்கூட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் அறிவித்தார். இத்த கைய சம்பவங்கள், இந்திய வெளியுறவுக் கொள்கை மீதான மோடி அரசின் நிலைப் பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக் குறிப்பு ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் அறிக்கை குறித்தான வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூட, “இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப் பாடு ஏற்கனவே ஜூன் 13 அன்று தெளிவுபடுத்தப் பட்டுவிட்டது, அதுவே இப்போதும் தொடர்கி றது. பதற்றங்களைத் தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனச் சுட்டிக்காட்டி, நாசுக்காகக் கூட்டமைப்பின் முடிவில் இருந்து விலகியுள்ளது. இதனை ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்ட மைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா தெரிவித்துவிட்டு, விவாதத்தில் பங்கேற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.