சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் மசூதி அருகே இந்துத்துவா குண்டர்கள் வன்முறை
மராட்டியப் பேரரசைத் தோற்று வித்த மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்., 19ஆம் தேதி ஆண்டுதோறும் மகா ராஷ்டிரா மற்றும் எல்லை மாநிலங்களில் சிவாஜி ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, மகாராஷ்டிரா எல்லை யில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் பகுதியில் வியாழனன்று சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் நடை பெற்றது. பாகல்கோட்டின் பழைய நகரப் பகுதியில் (ஓல்ட் சிட்டி) தொடங்கிய இந்த ஊர்வலம், மசூதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துத்துவா குண்டர்கள் வெறுக்கத்தக்க முழக்கங் களை எழுப்பி வன்முறையை தூண்டி னர். இதனால் அப்பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. சம்பவ இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி பதற்றத்தைத் தணித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
