கேரளாவில் மீண்டும் பலத்த மழை 4 பேர் பலி ; இயல்புநிலை கடுமையாக பாதிப்பு
கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக லேசான அளவில் தென்மேற்குப் பருவ மழை ஓய்வு எடுத்து இருந்த நிலையில், மேற்கு திசை வளிமண்டல அழுத்த காற்றால் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு கேரள மாவட்டங்களில் திங்களன்று இயல்பு வாழ்க்கையே கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மலப்புரத்தில் உள்ள தென்னிலா வில் கடந்த 24 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், கோழிக் கோடு வடகராவில் 18 செ.மீ மழையும், காசர்கோட்டின் பேயாறில் 16 செ.மீ. மழை யும், வயநாட்டில் வைத்திரி, கண்ணூரில் உள்ள தளிபரம்பா, ஹோஸ்துர்க், குடுலு மற்றும் காசர்கோட்டில் முளியாரில் தலா 15 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என கேரள வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. கனமழையில் சிக்கி மாநி லம் முழுவதும் 4 பேர் உயிரிழந்துள்ள னர். கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.