தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
பாலியல் வழக்கு
மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி எஸ்) தலைவரும், முன்னாள் பிர தமருமான தேவகவுடா பேரனும், ஒன்றிய அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கினார். பிரஜ்வால் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களு டன் நெருக்கமாக இருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், ஜேடிஎஸ் கிராம பஞ்சா யத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவ ருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அதன்பேரில் பிரஜ்வால் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகார் தொடர்பாக கர்நாடகா காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணை தொடங்கும் முன்பே பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். பின்னர் ஜெர்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப் பட்டார். பாலியல் வழக்கை அடுத்து ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப் பட்டார். இதையடுத்து ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் (எம்பி, எம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. அதன்படி, பாலியல் வன் கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் தொடர்ந்து சனிக்கிழமை அன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரஜ்வால் ரேவண்ணா வுக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டப்பிரிவு 376 உட்பிரிவு 2(என்) கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சந்தோஷ் கஜானந்த் பட்,”சாகும் வரை பிரஜ்வால் ரேவண்ணா சிறையில் அடைக்கப்படுவார்” என உத்தரவிட்டார். குறைந்த தண்டனை வழங்குமாறு கெஞ்சிய ரேவண்ணா முன்னதாக, பிரஜ்வால் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர்,”நான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பெண்ணும் தானாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப் பட்டது. அரசுத் தரப்பு வேண்டுமென்றே அவர்களை அழைத்து வந்து புகார் அளிக்க வைத்தது. எனக்கு குடும்பம் இருக்கிறது. 6 மாதங்களாக நான் எனது அம்மாவையும், அப்பாவையும் பார்க்கவில்லை. தயவு செய்து எனக்கு குறைவான தண்டனை கொடுங்கள். என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அரசியலில் வேகமாக வளர்வது தான்” என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதனை நீதிபதி சந்தோஷ் கஜானந்த் பட் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.