states

img

தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்க்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு, தில்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்க்கு,  நக்சல்கள் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதை நிறுத்தி வைக்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்து, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.