ஆந்திராவில் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் போராட்டம்
ஆந்திர மாநிலம் அல்லூரி சீத்தாராம ராஜு மாவட்டத்தில் நீர்மின்சார திட்டங்கள் காரணமாக பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடம்பெயர்வுக்கு எதிராக ஹுகும்பேட்டில் பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், ஹுகும்பேட் போராட்டக் களத்தில் மாநிலச் செயலாளர் வி.சீனிவாசராவ் உரையாற்றினார்.