கொரோனா; ஒரே நாளில் 11 பேர் பலி
சிக்கிம் பள்ளிகளில் கட்டுப்பாடு
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 119 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,264 ஆக அதிகரித்துள் ளது. கடந்த 2 வாரங்க ளை விட கொரோ னா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், பலி எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்க ளிலும் கொரோனா பரவல் வேகமெடுத் துள்ளது. இதனால் சிக்கிம் மாநில அரசு,”பள்ளிகளில் கொரோனா தொற்று க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதார நிலை யை கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதி களின் தலைவர்கள் உன்னிப்பாகக் கண் காணிக்க வேண்டும்” என பள்ளிக் கல்வித் துறை மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்க ளுக்கு அறிவுறுத்தியுள்ளது.