இந்திய பொது சுகாதாரத்திற்கு ஆபத்து காற்று மாசுபாடு காரணமாக 17 லட்சம் பேர் பலி
புதுதில்லி இந்தியாவில் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புக ளும் அபாயகரமான அளவில் அதி கரித்துள்ளதாக சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளி யிட்டுள்ள அறிக்கை எச்சரித் துள்ளது. இந்தியாவில் காற்று மாசு பாட்டினால் உருவாகும் தாக்கம் குறித்து 71 கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. அமைப்புகளைச் சேர்ந்த 128 நிபுணர்கள் இணைந்து விரிவான ஆய்வு ஒன்று நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி கடந்த 2022 இல் மட்டும் இந்தியாவில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசுபாடு காரணமாக உயிரி ழந்துள்ளனர். இது, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு களின் எண்ணிக்கை, அதே ஆண்டு பதிவான கொரோனா நோய்த்தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறப்புகளுக்கு முக்கி யக் காரணம் புதைபடிவ எரிபொ ருட்கள் தான் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப் பாக, அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியால் சுமார் 4 லட்சம் பேரும், சாலைப் போக்குவரத்தில் பயன்படுத்தப் படும் பெட்ரோலால் சுமார் 2.7 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பி ட்டுள்ளனர். இந்த மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மட்டு மின்றி, நாட்டின் பொருளாதார மும் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளது. 2022 இல் மட்டும், வெளிப் புறக் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட அகால மரணங்களால், இந்தியாவிற்கு 33,907 கோடி ரூபாய்க்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சத வீதத்திற்குச் சமமாகும். இந்த அறிக்கை, காலநிலை மாற்றத்தின் பிற தாக்கங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 இல், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் வெப்ப அலைகளை அனுபவித்ததாகவும், இதனால் 247 பில்லியன் மனித உழைப்பு நேரம் (2 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரத்து 318 வருடங்கள்) வீணா னதாகவும் அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.
