பிஎச்டி உட்பட 7 கல்விப் பட்டங்கள் ; ஒரு முறை கூட பதவி உயர்வு இல்லை தலித் ஊழியரை 17 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் மும்பை மாநகராட்சி நிர்வாகம்
மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மும்பை மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சியின் (பெருநகர மும்பை மாநகராட்சி - Brihan mumbai Municipal Corporation - BMC) திடக்கழிவு மேலாண்மைத் துறை யில் மோட்டார் இயக்குபவராக இரவுப் பணிகளில் பணியாற்றி வருகிறார் சுனில் யாதவ். பட்டியல் சாதி மெஹ்தர் சமூ கத்தைச் சேர்ந்த 43 வயதான சுனில் யாதவ், 2005ஆம் ஆண்டு பெருநகர மும்பை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளராகச் சேர்ந்தார். தொடர்ந்து 2007ஆம் ஆண்டு மோட்டார் இயக்கு பவர் பொறுப்புடன் நிரந்தர ஊழியரா னார். வறுமை மற்றும் சமூக பாகுபாட் டின் சுழற்சியை உடைக்க தீர்மானித்த சுனில், கடுமையான இரவு நேரப் பணி களுடன் தனது கல்வியைத் தொடர்ந்தார். பகலில் கல்லூரிப் படிப்பு, இரவு 10 மணி முதல் 6 மணி வரை மாந கராட்சி பணி என கடுமையாக உழைத்த சுனில் யாதவ், டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் (TISS) பி.காம், பத்திரி கைத் துறையில் பி.ஏ, உலகமய மாக்கல் மற்றும் தொழிலாளர் துறை யில் எம்.ஏ, சமூகப் பணி முதுகலைப் பட்டம், எம்பில் மற்றும் முனைவர் பட்டம் என 7 பட்டங்களை பெற்றுள்ளார். 17 ஆண்டுகாலம் ஒரே பணி பிஎச்டி உட்பட 7 கல்விப் பட்டங்க ளைப் பெற்றிருந்தாலும் சுனில் யாதவ் தனது 17 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார் இயக்குபவராகவே பணி யாற்றி வருகிறார். ஒரு பதவி உயர்வு கூட பெறவில்லை. அதிகாரிகளின் செயலற்ற தன்மை மற்றும் தெளிவற்ற ஆட்சேர்ப்பு செயல்முறைகளால் விரக்தியடைந்த சுனில், நீண்டகா லமாக நிலுவையில் உள்ள தனது தகுதிகளுக்கான அங்கீகாரம் மற்றும் சமூக மேம்பாட்டு அதிகாரி (சிடிஓ) பதவி உயர்வு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனது கல்வி நிலைமை, 17 ஆண்டு கால பணி நிலவரம் உள்ளிட்டவை களை குறிப்பிட்டு மும்பை உயர்நீதி மன்றத்தில் சுனில் யாதவ் தாக்கல் செய்த மனுவில்,”அக்டோபர் 1, 2003 தேதியிட்ட அரசு தீர்மானம் கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வை ஆதரிக்கிறது. ஆனால் நல்ல கல்வித்தகுதி இருந்தும், 17 ஆண்டு களாக ஒரே பணியில் தான் இருக்கி றேன். 2014ஆம் ஆண்டு தொழிலாளர் அதிகாரி பதவிக்கான தனது விண் ணப்பம் தகுதிகளை பெற்றிருந்தாலும், பதவிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே போல 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது கல்வித் தகுதி களை அறிந்த உதவி ஆணையர் சிடிஓ பதவிக்கு உயர்த்த பரிந்துரைத்தார். ஆனால், அந்த கோப்பு எந்த விளக்க மும் இன்றி நிலுவையில் உள்ளது. ஆனால் 2022ஆம் பிப்ரவரி மாதமே 10 சிடிஓ பதவிகளுக்கான நியமனம் முழுமையான ரகசியத்தன்மையுடன் நடத்தப்பட்டது. தேர்வு நிபந்தனைகள் அல்லது நியமனங்களின் நிலை தொடர்பாக மும்பை மாநகராட்சியின் கீழ் செய்திகள் எதுவும் வெளியாக வில்லை. எனவே தனக்கு பதவி உயர்வு அளிக்கவும், ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிடவும், நீடித்த தாமதத்திற்கு விளக்கம் அளிக்கவும் பெருநகர மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு விசாரணையின் போது பெருநகர மும்பை மாநகராட்சி நிர்வா கம்,”பணி நியமன முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது. சுனில் யாதவின் மனுக் களுக்கு பதிலளிக்க போதுமான கால அவகாசம் வேண்டும்” என கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும் என பெருநகர மும்பை மாநக ராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.