பீகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது.
சிவான் மாவட்டத்தின், தியோரியா தொகுதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலமானது பல கிராமங்களை இணைக்கிறது. இந்நிலையில், இன்று காலையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதுபோன்று பீகாரில் பாலம் இடிந்து விழுவது கடந்த 15 நாள்களில் மட்டும் இது ஏழாவது சம்பவமாகும்.