லக்னோ, டிச.22- உத்தரப் பிரதேச மாநிலத் தில், எதிர்க்கட்சித் தலைவர் களின் தொலைபேசிகளை பாஜக அரசு வேவு பார்ப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. முதல்வர் ஆதித்யநாத்தே நேரடியாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கிறார் என்பது சமாஜ் வாதி கட்சியின் தலைவர் அகிலே ஷின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், போன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக லக்னோ வில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “தொலைபேசி அழைப்பு கள் ஒட்டுக் கேட்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். என் பிள்ளை களின் இன்ஸ்டாகிராம் கணக்கை கூட ஹேக் செய்கிறார்கள். அவர் களுக்கு வேறு வேலையே இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “
கடந்த ஐந்து ஆண்டு களாக மாநில வளர்ச்சிக்கு எந் தத் திட்டத்தையும் அறிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஏன் திட்டங்களை அறிவித்து வருகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்த லில், தங்களது சக்தியை பாஜக வுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட் டுள்ளார். பிரியங்கா காந்திக்கு, 18 வயதில், மிரயா வத்ரா என்ற மகளும், 20 வயதில் ரையான் வத்ரா என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ‘என்எஸ்ஓ’ நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ என்ற வேவு மென் பொருள் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச் சர் பிரகலாத் சிங் படேல், முன் னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உற வினர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் சில மாதங்களுக்கு பெரும் பர பரப்பைக் கிளப்பியது குறிப் பிடத்தக்கது.