states

தேர்தல் ஏற்பாடு உ.பி.யில் ரூ9,600 கோடி திட்டங்கள் தொடக்கம்

லக்னோ, டிச. 7 - உ.பி-யில் ரூ9,600 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆளும் பாஜக புதிய ‘வியூகங்களை’ வகுத்து வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரமாண்ட யாத்திரைகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களைக் கைப்பற்றுவது குறித்தும் லக்னோவில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் கோரக்பூரில் ரூ.1,000 கோடியில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜூலை 2016ல் அடிக்கல் நாட்டிய நிலையில் 750 படுக்கைகளுடன் கோரக்பூர் எய்ம்ஸ் கட்டப்பட்டுள்ளது.

;