திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில ஆளுநராக இருப்பவர் சி.வி.ஆனந்த் போஸ். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு மிக நெருக்கமானவர். இதன்காரண மாகவே தான் கவனிக்க வேண்டிய ஆளுநர் பத வியை விட, பாஜகவைச் சேர்ந்த எதிர்கட்சித் தலை வரை போன்று மேற்கு வங்க மாநிலத்தில் பணி யாற்றி வருகிறார். இதனால் ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸுக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு அலை உள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸுக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் வியா ழனன்று ராஜ்பவனுக்கு அருகே உள்ள ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,”மேற்குவங்க ராஜ்பவனில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் என்னை நிரந்தர ஊழியராக மாற்றப்போவதாக 19.4.2024 மற்றும் 02.05.2024 ஆகிய இரண்டு நாட்க ளில் ஆளுநர் ராஜ்பவனுக்கு அழைத்தார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் ஆளுநர் என்னை பாலி யல் வன்முறைக்கு அழைத்து, என்னை தகாத முறை யில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். நான் மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறினேன்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் புகார் அடிப்படையில் ஹரே ஸ்ட்ரீட் காவல்நிலைய போலீசார் ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸிடம் விசாரணை நடத்த உள்ள தாக வியாழனன்று அறிவித்தனர். மேலும் மேற்கு வங்க மாநில நிதித்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா,”ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கி றது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் பிரதமர் மாநிலத்திற்கு வரும் நாளில் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. இது ராஜ்பவனுக்கு நல்லதல்ல.” எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,”பாலியல் புகார் தொடர்பாக மேற்குவங்க போலீசார் ஆளுநர் மாளிகைக்குள் நுழையக் கூடாது” என ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் சர்ச்சைக்குரிய வகையில் உத்தரவிட்டுள் ளார். இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”தனக்கு எதிராக அவதூறான மற்றும் அர சியல் சாசனத்திற்கு எதிரான ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இதனால் தலைநகர் கொல் கத்தா, டார்ஜிலிங் மற்றும் பாரக்பூரில் உள்ள ஆளுநர் மளிகை வளாகத்திற்குள் மாநில நிதித்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா மற்றும் மேற்கு வங்க போலீசார் நுழையக் கூடாது” என தனது அறிக் கையில் ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் கூறியுள்ளார். ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸின் இந்த அறிக்கைக்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றன.
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்களை தடுக்கும் ஆளுநர்
“பாஜகவிற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கும் புகார் கடிதங்களை தனது ஆதரவு ஊழியர்கள் மூலம் ஆளுநர் தடுக்கிறார். இதுதொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தால் தண்டிக்கும் வேலைகளில் ஆளுநர் ஈடுபடு கிறார்” என ஆளுநரின் பாலியல் சீண்ட லால் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.