states

img

மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே மருத்துவக்கல்லூரி மாணவி வன்கொலையை கண்டித்தும், நீதி கோரி கோரியும் மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் புதனன்று போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டத்தில் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், சிபிஐ விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், சாட்சியங்களை அழிக்கும் சதிச் செயல்களைக் கண்டித்தும்,  மாணவி வன்கொலைக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பப்பட்டன.