மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளம் – நோடஹலி என்ற பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் போது பட்டாசு ஆலை அமைந்திருந்த 2 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது தொடர்பாகவும், இந்த வெடிவிபத்து காரணமாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.