மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ மாணவி வன்கொலையை தொடர்ந்து வியாழனன்று இரவு ஹரிபாலில் சிங்கூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டார். இதற்கான காரணத்தை ஹரிபால் போலீசார் இன்னும் தெரிவிக்காத நிலையில், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய மாதர் சங்க ஊழியர்கள், இடது முன்னணி மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஹரிபால் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.