கொல்கத்தா, ஜூலை 22 - குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக-வுக்கு உதவி செய்யும் வகையில், அக்கட்சியுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக காங் கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டுஉள்ளார். இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணா முல் காங்கிரஸ் அதிருப்தி தெரி வித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் குடி யரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போ வது இல்லை என்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் வேலையையே மம்தா பானர்ஜி செய்வதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, அந்தக் கட்சிக்கும் பாஜக வுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் மேற்குவங்க மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர் பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற விஷயங்களில் எதிர்க்கட்சி களிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்த லில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தா பானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்தவுடன் ஓடிவிட்டார். ஆனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹா-வுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜக-வுடன் எந்த மோதலையும் விரும்ப வில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்க ளிக்காமல் புறக்கணிக்க விரும்பு கிறார். பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜி லிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறி விக்கப்பட்டார். அதாவது திரிணா முல் - பாஜக இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.