states

img

ரூ.2500 கோடி சத்துணவுத் திட்டத்தில் ம.பி. பாஜக முதல்வர் ஊழல்?

போபால், செப்.9- ம.பி. மாநிலத்தில் ரூ. 2500 கோடி மதிப்பி லான சத்துணவுத் திட்டத்தில், ஆளும் பாஜக அரசு மாபெரும் ஊழலை அரங்கேற்றி இருப்ப தாக, சிஏஜி அறிக்கை மூலம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ள இளம்பெண் கள் (OOSAG) ஆகியோருக்கு உலர் உணவு மற்றும் சமைத்த பொருட்களை உள்ளடக்கிய சத்துணவு வழங்குவதற்காக மத்தியப் பிரதேசத்தில் ரூ. 2500 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் சத்துணவு தயாரிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும்  அதன் தரக்கட்டுப்பாடு ஆகிய பல அம்சங்களி லும் ஊழல் நடந்திருப்பதாக மத்திய தலை மைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General - CAG) அறிக்கை அளித்துள்ளார்.

பயனாளிகளின் எண்ணிக்கையில் மோசடி  நடந்துள்ளது. உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்காக பதிவு செய்யப்பட்ட வாக னங்களின் எண்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்களாக இருக்கின்றன என்றும் சிஏஜி கண்டுபிடித்துக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், “இது மிகப் பெரிய ஊழல். இந்த ஊழலில் கோடிக் கணக்கில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. நாங்கள் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். மேலும், இதனை சிபிஐ விசாரிக்கவும் வேண்டுகோள் வைக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ம.பி. மாநிலத்தில் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தும் துறை மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதால், இந்த விவ காரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலை யிட்டு சிபிஐ விசாரணை மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறி யுள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மறுத்துள்ளார்.

“மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இறுதியானது அல்ல” என்று கூறி யிருக்கும் அதேநேரத்தில், “காங்கிரசின் 2018  முதல் 2020 வரையிலான ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் சமாளித்துள்ளார். ஆனால், சவுகானின் இந்த சமாளிப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவு  பொறுப்பாளர் கே.கே. மிஸ்ரா, “குறிப்பிட்ட காலத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் (WCD) அமைச்சராக இருந்தவர் தற்போது பாஜக-விலுள்ள இமார்தி  தேவி-தான்” என்பதை சவுகானுக்கு நினைவு படுத்தியுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் இமார்த்தி தேவி உள்ளிட்ட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுத்துத் தான் ம.பி. மாநிலத்தில் குறுக்கு வழியில் சிவ்ராஜ்  சிங் ஆட்சியமைத்தார். எனினும் இடைத்தேர்த லில் இமார்தி தேவி தோற்றுப் போனதால்,  அவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த  பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறையை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனக்குக் கீழ்  எடுத்துக் கொண்டார். தற்போது அந்தத்துறை சிவ்ராஜ் சிங் சவுகான் வசமே உள்ளது என்பதை யும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.