states

ரூ.72லட்சம் மோசடி 170 ஆண்டுகள் சிறை

போபால், ஜூன் 30- 34 பேரிடம் ரூ.72 லட்சம்  மோசடி செய்த  குஜராத்தைச் சேர்ந்த நப ருக்கு 170 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மத்தியப் பிரதேச மாநில சாகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலம் தாபியைச் சேர்ந்த நசீர் முகமது என்ற நசீர் ராஜ்புத்  (55). இவர்  மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் துணி தொழிற்சாலை அமைப்பதாக கூறி 34 பேரி டம் ரூ.72 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கை சாகர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 34  நபரை ஏமாற்றிய விவ காரத்தில் ஒவ்வொரு வழக்குக்கும் ஐந்து ஆண்டு கள் வீதம் 170 ஆண்டுகள் (34*5 -170) சிறை தண்டனை யும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா  ரூ.10,000 வழங்கவும் சாகர்  நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு முன் கடந்த மார்ச்  மாதம் 35 லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.4,000 கோடிக்கு மேல் மோசடி செய்த சிட்  பண்ட் நிறுவனத்தின் இயக்கு நருக்கு 250ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டதே நாட்டின் நீண்ட கால சிறைத்தண்டனையாக உள்ளது.