states

img

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவரும், பயணிகள் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில், பல்கார் அருகே ஆர்.பி.எஃப் வீரர் சேட்டன் சிங் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவரும், பயணிகள் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, சேட்டன் சிங், டஹிசர் ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர் சேட்டன் சிங்கை கைது செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் சேட்டன் சிங்கிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.