ஹைதராபாத், ஏப்.15 - தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை, திறந்து வைக்கப்பட்டு உள்ளது. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற ஹூசைன் சாகர் ஏரி கரையில், தெலுங்கானா தலைமைச் செயல கத்திற்கு அருகில் 50 அடி உயரப் பீடத்தில், 360 டன் எஃகு இரும்பு, 114 டன் வெண்கலத்தைக் கொண்டு, 146 கோடியே 50 லட்சம் செலவில் டாக்டர் அம்பேத்கரின் சிலை வடிவ மைக்கப்பட்டு இருந்தது. இதனை, வெள்ளிக்கிழமையன்று மாலை, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவ, 30 புத்த பிட்சுக்களின் சிறப்பு வழிபாட்டுக்கு இடையே, தெலுங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் திறந்து வைத்தார். விழாவில் டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெலுங்கானா மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்க ணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் கே. சந்திர சேகர ராவ் பேசியிருப்பதாவது: “பி.ஆர். அம்பேத்கர் உலகளா விய மனிதர். அவர் முன்வைத்த கோட் பாடு உலகளாவியது. அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவது பட்டியல் வகுப்பினருக்கான நம்பிக்கை. டாக்டர் அம்பேத்கரின் சிலையானது, இது ஒரு சிலை மட்டுமல்ல; ஒரு புரட்சி. தெலுங்கானாவின் கனவினை உண் மையாக்கும் சின்னமாக இந்தச் சிலை உள்ளது. அம்பேத்கர் ஒரு தலை சிறந்த சட்ட மாமேதை. அவரின் விஸ்வ ரூப சிலையை நிறுவ ஆசைப் பட்டேன். அந்த வகையில், அம்பேத்க ரின் மனித சிந்தனை வடிவத்தை உலகிற்கு காட்டவே சிலை நிறுவப் பட்டுள்ளது.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தால் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. எனவே, தெலுங்கானா புதிய செயலகத்திற் கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள் ளது. விரைவில் அதுவும் திறப்புவிழா காணவுள்ளது. நமது அரசியலமைப்புச் சாச னத்தை அம்பேத்கர் எழுதி சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் கூட பட்டியல் வகுப்பினர் முழுமையாக முன்னேற வில்லை. 2024 தேர்தலின் மூலம் அடுத்த அரசும் எங்களுடையதுதான் (பாரத் ராஷ்டிர சமிதி). இதை நான் சொல்வதை எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால், ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும், நாடு முழுவதும் தலித் பந்து திட்டம் (Dalit Bandhu Scheme) கொண்டு வரப்படும். இதன்மூலம் 25 லட்சம் தலித் குடும்பங்களுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ. 10 லட்சம் வழங்கப் படும். இந்த தொகை 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அம்பேத் கர் பெயரில் விருது வழங்க வேண்டும் என கதி பத்மராவ் பரிந்துரை செய்துள் ளார். இந்த விருதுக்காக 51 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும். இதற்கு வருடந்தோறும் 3 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். அதனைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று, சிறந்த சேவை செய்பவர்களுக்கு மாநில அரசு விருது வழங்கும்.” இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசி யுள்ளார்.
முன்னதாக, “தெலுங்கானா தியாகிகள் நினைவிடம், மாநில சட்டப்பேரவை கட்டடம் ஆகியவற்று க்கு அருகில் இருக்கும் இந்தியாவின் உயரமான இந்த அம்பேத்கர் சிலை, தினமும் மக்களுக்கு உந்து சக்தியாக வும் மாநில நிர்வாகத்திற்கான ஊக்க மாகவும் இருக்கும்” என்று கூறிய சந்திர சேகர ராவ், பிரம்மாண்ட அம்பேத்கர் சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுதாரையும் பாராட்டி னார்.