states

காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசு பதில் மனு

பெங்களூரு, செப்.6- தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நதிநீர் பங்கீட்டை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு செப்டம் பர் 21 ஆம் தேதி விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செயப்பட்டுள்ளது. அந்த மனுவில், உரிய கணக் கீடுகள் இல்லாமல் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள் ளது. காவிரி நதியின் வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த நீர்பிடிப்பு பகுதிகளிலும் கணக் கிட வேண்டும். கர்நாடகத்தின் 4 அணைகளில் உள்ள நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிட கூடாது. எனவே, உரிய கணக்கீடுகள் இல்லா மல் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவைதள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.