states

img

சாய் பல்லவியை மிரட்டும் பாஜகவினருக்கு திவ்யா ஸ்பந்தனா கண்டனம் ‘நல்ல மனிதனாக இரு...!’ என்றால் தேசவிரோதியா?

பெங்களூரு, ஜூன் 16- “நல்லவர்களாக இருங்கள் என்று கூறிய தற்காக நடிகை சாய் பல்லவி மீது ‘தேச விரோதி’ முத்திரை குத்துவீர்களா? என்று பாஜக வினருக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கண்ட னம் தெரிவித்துள்ளார்.  கருத்துச் சுதந்திரம் பெண்களுக்கு மட்டும் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி யுள்ளார். வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர்  ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய்  பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ என்ற  திரைப்படம் இன்று (ஜூன் 17) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சாய்பல்லவி இடதுசாரி போராளி கதாபாத்திரத்தில் நடித்தி ருப்பதாக கூறப்படுகிறது.  இதையொட்டி, சாய் பல்லவி-யிடம் நேர் காணல் நடத்திய யூ-டியூப் சேனல் ஒன்று “நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இடதுசாரி இயக்கங்  களால் ஈர்க்கப்பட்டவரா?” என கேள்வி எழுப்பி யிருந்தது.  அந்தக் கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி, “நான் நடுநிலையான குடும்பச் சூழலில்  வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டும்  என்று எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது  தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடி யாது.  ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் பண்  டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவைக் கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள்.

அந்த நபர் கொல்லப்பட்ட வுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடு கிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்?.  நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடது சாரியாக இருந்தாலும், வலதுசாரியாக இருந்தா லும் நீதி கிடைக்காது.  என்னைப் பொறுத்தவரை, பெரிய எண் ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்” என்று கூறி யிருந்தார். கடந்த மார்ச் மாதம் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம், பாஜக-வினர் உள்ளிட்ட வலதுசாரிகளால் பிரபலப்படுத்தப்பட்ட பட மாகும். பிரதமர் மோடியே படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.  பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம்,  கர்நாடகா, ஹரியானா, குஜராத், உத்தரகண்டில் இப்படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்கச்  செல்லும் போலீசாருக்கு விடுப்பும் வழங்கப் பட்டது. அப்படிப்பட்ட நிலையில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைக் குறிப்பிட்டு சாய் பல்லவி அளித்த பேட்டி துணிச்சலானதாகவும், மனிதாபி மானம் கொண்ட ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.

அவரின் இந்தப் பேட்டிக்கு சமூகவலை தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. பல ரும் சாய் பல்லவி-யின் பேட்டியை தங்களின்  சமூகவலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ‘சாய்பல் லவி’ (#SaiPallavi) என்கிற ஹாஷ்டேக்கை டுவிட்ட ரில் டிரெண்ட் செய்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பாஜக உள்ளிட்ட  சங்-பரிவாரங்கள் வழக்கம்போல தங்களின் வேலையை காட்டத் துவங்கினர். சாய் பல்லவி குறித்து சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறான கருத்துக்களை அள்ளிக்  கொட்ட ஆரம்பித்தனர். அவருக்கு பகிரங்கமாக மிரட்டலும் விடுத்து வந்தனர். இந்நிலையில், சாய் பல்லவிக்கு எதிரான  அவதூறுகளுக்கு, முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும் பிரபல கன்னட திரைக்கலைஞருமான திவ்யா ஸ்பந்தனா கண்டனம் தெரிவித்துள் ளார். “சாய் பல்லவிக்கு எதிரான அவதூறுகள், அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். எல்லோருக்கும் இருக்கும் கருத்து ரிமை பெண்களுக்கு மட்டும் இல்லையா? எந்த வொரு ஒழுக்கமான மனிதனும் சொல்வதைத தான் சாய் பல்லவியும் கூறியிருக்கிறார். ஒடுக் கப்பட்டவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனவே, துஷ்பிரயோகம் செய்யாமல் ஒருவரு டன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். மாறாக, இன்றைக்கு ஒருவர் ‘நல்லபடியாக இரு..!’ ‘நல்ல மனிதனாக இரு..!’ என்று சொன்னால் அவர்களை ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள்? ‘கோலிமாரோ’ என்று சொல்லி வெறுப்பை உமிழ்கிறார்கள். மாறாக,  இவ்வாறு வெறுப்பை உமிழ்பவர்களே ஹீரோக் களாக வலம் வருகிறார்கள் நாம் எப்படிப்பட்ட மோசமான உலகில் வாழ்கிறோம்?” என்று  திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.