states

img

சில்லறை விலை வாசி 6.1 சதவிகிதம் உயர்வு

உணவுப்பொருட்களின் சில்லறை விலைவாசி 6.1 சதவிகிதம்வரை உயர்ந்துள்ளது என்ற தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த சூழலில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றின் போது ஒன்றிய அரசின் அலட்சியத்தால் சாமானிய மக்களின் வாக்கும் சக்தியை கடுமையாக பாதித்துள்ளது. 
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் 5.36 சதவிகிதமாக இருந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி கடந்த ஜனவரி மாதம் கிராமப்புறங்களில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.12 சதவிகிதமாகவும் நகர்புறங்களில் 5.91 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 டிசம்பரில் 4.05 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022 ஜனவரியில் 5.43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 
சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் 18.70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84சதவிகிதமாகவும், எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. 
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக சில்லறை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.