புதுச்சேரி, ஏப். 4- ‘ரங்கசாமியின் விளம்பர அரசியல் எடுபடாது’ என புதுவை முன்னாள் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசில் ஜிப்ம ருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கித் தந்தோம். இந்த பிரத்யேக மருத்துவமனை ரூ.900 கோடியில் அமைய இருந்தது. இதற்காக நிலத்தை சேதராப்பட்டில் ஒதுக்கித் தந்தோம். தற்போது அத்திட்டத்தை ஒன்றிய அரசு வேறு மருத்துவமனைக்கு மாற்றி யுள்ளது. தென் மாநிலங்களிலேயே முக்கியமாக அமைய விருந்த இந்த மையத்தை மாற்றியிருப்ப தன் மூலம் புதுவையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. காங்கி ரஸ் ஆட்சியில் ஜிப்மரில் அனை வருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது, மருந்து தட்டுப்பாடு இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜிப்மர் தற்போது சீரழிந்து வரு கிறது. நோயாளிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர். தற்போது உயர்சிகிச்சைக்கும் கட்டணம் விதித்துள்ளனர். இத னால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள னர். கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பி யுள்ளேன். புதுவை சட்டப்பேரவையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என பல அறிவிப்புகளை முதல மைச்சர் ரங்கசாமி வெளி யிட்டுள்ளார்.அது வரவேற்க்கத் தக்கது. ஆனால் அதற்கான நிதி எங்கே உள்ளது. ஆண்டுக்கு ரூ. 700 கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதை செய்யாமல் கோப்புகளை தயாரித்து அனுப்பும்போது தலைமைச் செயலாளர், செய லாளர்கள் விதிமீறி ஒப்புதல் தர மறுத்தால் அவர்கள் மீது பழிபோடுவது ரங்கசாமியின் வழக்கம். பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் இவர்களையும் நடுத்தெருவில் ரங்கசாமி நிறுத்தப்போகிறார். அவரது விளம்பர அரசியல் இனியும் எடுபடாது. ரேசன் கடைகளை திறந்து மானிய விலையில் பொருட்களை தருவதாகக் கூறி விட்டு ரேசன் கடை ஊழி யர்களுக்கு ஊதியம் தராதது ஏன்? நான் எழுப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் ரங்கசாமி பேரவையில் வாயே திறக்க வில்லை. இவ்வாறு நாராயண சாமி கூறினார்.